2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காட்டு யானை தாக்கியதில் சிறுமி பலி

Editorial   / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை சீனிக்கு கால பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காட்டு யானை தாக்கியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் தந்தை பலத்த காயங்களுடன் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தந்தை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் வந்த யானை அவரைத் தாக்க முயன்றது. காட்டு யானையிடமிருந்து தப்பிக்க தந்தை வீட்டை நோக்கி ஓடினார், தந்தையைப் பின்தொடர்ந்து வந்த காட்டு யானை சிறுமியைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X