2026 மே 02, சனிக்கிழமை

காணாமல்போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினையொட்டி, காணாமல் போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த  கவனயீர்ப்புப் பேரணியும் ஊடகவியலாளர் சந்திப்பும்  இன்று  (30) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

மனித எழுச்சி நிறுவனத்துடன் இணைந்து இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் பேரணியின்போது, காணாமல் போன முஸ்லிம் உறவினர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று மனித எழுச்சி நிறுவனத்தின் அலுவலகத்தினை சென்றடைந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .