2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கிளிலும் அத்துடன் மத்திய மலைநாட்டு பிரதேசங்கள் சிலவற்றிலும் காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 65 வரை அதிகரிக்குமென திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மீன்பிடி, ஏனைய கடற்றொழில்களில் ஈடுபடும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .