2025 ஜூன் 09, திங்கட்கிழமை

குண்டர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீது மக்கள் தாக்குதல்

Freelancer   / 2022 மே 09 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மஹிந்தவுடனான கூட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள ‘மைனா கோ கம’ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய இரண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்ட தளங்களையும் அழித்திருந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பேருந்துகள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் கொழும்பு திம்பிரிகஸ்யாயவுக்கு அருகில் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .