2025 ஜூன் 18, புதன்கிழமை

குருநாகல் நகர மேயரைக் கைதுசெய்யுமாறு நாமல் மனுதாக்கல்

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவை உடனடியாகக் கைதுசெய்து, குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குருநாகல் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை விவசாய அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்னவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொல்பொருள் கட்டடமானது மிகப் பழமையான கட்டடம் என தொல்பொருள் திணைக்களத்தால் கடிதம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டடத்தை சட்டவிரோதமாக உடைத்தமைக்கு எதிராக, குருநாகல் நகர மேயருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்குமாறு, தெரிவித்து இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .