2026 மே 09, சனிக்கிழமை

dd

கொச்சினுக்கான விமானசேவை இரத்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சினுக்கு இடம்பெறும் விமானசேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று (09) முதல் 11 ஆம் திகதி வரை இந்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கும் என, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விவரங்களை +914842362042 என்ற ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கொச்சின் நகர காரியாலயத்துடன், தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணித்தியால சேவை நிலையத்தின் +94117771979 என்ற, தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.

கொச்சின் விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக இந்த விமான சேவைகள் இரத்து ​செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .