2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொஹாகொட குப்பை மலை பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரின் முக்கிய சுற்றாடல் பிரச்சினையாகக் காணப்படும் கட்டுகஸ்தோட்டை – கொஹாகொட குப்பை மலைத் தொடர்பான பிரச்சினைக்கு விரைவானத் தீர்வைப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவித்துள்ளார்.

மீதொட்டுமுல்ல போன்று இன்னொரு துயர சம்பவம் நடைபெறுவதற்கு இடமளிக்காமல் குறித்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொஹாகொட கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ளல் தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்களை பாதிப்படையக் கூடிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் முறையான கழிவு மீள்சுழற்சி முறை ஊடாக குறித்தக் கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நகர சபை மற்றும் மாகாண சபைகள் ஒன்றிணைந்து உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அதற்குத் தேவையான உதவியை வழங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .