Editorial / 2024 நவம்பர் 14 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

தம்பானையில் உள்ள வேடுவ சமூகத்தின் துணைத் தலைவர் குன்பாண்டியா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாக்களிக்க இடமளிக்கவில்லை.
தோளில் கோடரியுடன் வாக்குச் சாவடிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வாக்களிக்காமல் வீடு திரும்பினர்.
தம்பானை கனிஷ்ட பாடசாலை வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்க அழைத்தபோது, வேடுவ சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தின் அடையாளமான கை கோடரியை தோளில் சுமந்து வந்திருந்தமையால், வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட தலைமை அதிகாரி அவர்களை வாக்களிப்பு நிலையத்துக்கு நுழைய அனுமதி மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த சமூகத்தின் தலைவரான உருவரிகேலகே வன்னில எத்தோ வந்தபோது, தோளில் கோடரியுடன், அவர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
அத்துடன், அந்த குலத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அவரைப் பின்தொடர்ந்து, வழக்கம் போல் கோடாரியை ஏந்தி வாக்குச் சாவடிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அந்த குலத்தைச் சேர்ந்த துணைத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் வாக்களிக்க வரவில்லை.

21 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
59 minute ago
3 hours ago