2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’கோட்டாபய வெற்றிபெற்றால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நிச்சயம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் இதுவரை விடுவிக்கப்படாது சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை நிச்சயம் உறுதி செய்வோம்” என,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், “இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல. இது எமது ஆழ்மன விருப்பம்” எனவும்,  அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் வட்டார நிர்வாக செயலாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றூகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அரசியல் இலாபங்களுக்காக இதுவரை விடுவிக்கப்படாதுள்ள அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு நம்பகமின்மைத் தன்மை காணப்படுகின்றது.

“இதை மாற்றியமைத்து அவர்களதும் அவர்களது குடும்பங்களதும் எதிர்காலம் தொடர்பில் நாம் உறுதியான நம்பிக்கை கொடுக்க வேண்டும். இதை நாம் செய்து முடிக்க அரசியல் அதிகாரங்கள் எமது கரங்களுக்கு வேண்டும்.

“அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவின் வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அவரது வெற்றியில் எமது மக்களின் பங்களிப்பு இருக்குமானால் அதனூடாக நாம் ஆட்சிக்கு வந்தால் அந்த கைதிகளின் விடுதலையை நிச்சயம் உறுதி செய்வோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X