2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்காட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாயப ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

அவன்காட்  வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

எனினும், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் இந்த வழக்கு ஒத்திவைக்கபடுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .