Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Gavitha / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகலில் இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாட்டில் 10,000 பேர் மாத்திரமே கலந்துக்கொண்டிருந்தனர்' என்று பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்; அலுவலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) நடத்தப்பட்ட ஊடகவியாலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், '500,000 ஆதரவாளர்கள் அந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை. அது பொய்யாகும். பேரணிகளில் எத்தனை ஆதரவாளர்கள் கலந்துக்கொண்டனர் என்பதை அட்டவணையிடுவது, தற்போது இலங்கையிலுள்ள விளையாட்டாகும். எத்தனை பேர் வந்தார்கள் என்பதை கணக்கிடுவதற்கு முன்னர், சுதந்திரக்கட்சியே ஒரு எண்ணிக்கையை சொல்லிவிட்டது' என்று அவர் கூறினார்.
'யாருமே இல்லாத பஸ்கள் சென்றன. வரலாற்றிலேயே முதல் தடவையாக 500,000 பேர் வந்தனர் என்று அமைச்சர்
எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். 2,800 பஸ்கள் சென்றன என்று மேல் மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். 500,000 ஆதரவாளர்களும் 2,800 பஸ்களில் வந்தால், 50-60 பேர் மாத்திரம் செல்லக்கூடிய பஸ் ஒன்றில் 179 பேர் பயணித்துள்ளனர் என்பதே அர்த்தம்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
'அவ்வாறாயின் ஒரு பஸ்ஸில் சென்ற ஆதரவாளர்கள், ஜன்னல் வழியாகவும் கதவு வழியாகவும் தொங்கிக்கொண்டா சென்றிருப்பார்கள் என்று மக்கள் கேள்விகேட்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
6 hours ago
7 hours ago