Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகியோரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவே மேற்கண்டவாறு பரிந்துரை செய்துள்ளது.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025