2025 ஜூன் 09, திங்கட்கிழமை

செருகி, மின்குதைகளுக்கு தரக்கட்டுப்பாடு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மேனகா மூக்காண்டி

மின் வழங்கலுக்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளக் (செருகி) மற்றும் சொக்கட் (மின்குதை) பாவனையினால் பல்வேறு மரணங்கள் சம்பவித்து வருகின்றன. அதனால், அதிகளவிலான பாதிப்புக்களும் ஏற்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர்க்கும் நோக்கில், இலங்கையினுள் பாவிக்கப்படும் பிளக்ஸ் மற்றும் சொக்கட்களுக்காக, சர்வதேசத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பு வகை தரத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

'தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது' என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறினார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும், வாராந்த செய்தியாளர் மாநாடு, நேற்றுப் புதன்கிழமை, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இதன் பிரகாரம், தற்போது இலங்கையினுள் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் அடுத்த இரு ஆண்டுகளில் விற்பனை செய்யப்படுகின்ற அங்கிகரிக்கப்பட்ட தரத்தில் அல்லாத பிளக்ஸ் மற்றும் சொக்கட்களை, அதன் ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த வழிசமைத்து கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது' என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5