2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமையினால் உதவி கோரும் மாணவன்

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

பேருவளை, இக்ரா கல்லூரியில் மின்னியல் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் இல. 124 கண்டி வீதி பறகஹதெனிய என்னும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட 17 வயதுடைய ஏ.எம். முஹம்மத் ஹம்ஸல் என்ற இம் மாணவனின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளன.

கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ள இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக, இருபது இலட்சம் ரூபாய் செலவாகும் என, கண்டி போதனா வைத்தியசாலையின் சிறுநீரக விசேட நிபுணத்துவ வைத்தியதிகாரி ஏ.டப்ளியு.எம். வஸீல் தெரிவித்துள்ளார்.

மாணவனது தந்தை அப்துல் முனாப், சாதாரண தொழில் புரிபவர். இதனால், மகனின் சத்திர சிகிச்சைக்காகப் பெற்றோர்கள், பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, முயுமான நிதி உதவியை வழங்குமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

என். பி. ஏ. முனாப்
கணக்கு இலக்கம்: 199200123230868
மக்கள் வங்கி
கிளை: மாவத்தகம
தொடர்புகளுக்கு: 0778393929, 0372297560


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .