Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜூலை 06 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார சேவையானது வெறும் சேவை மாத்திரமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஆகியன அந்த சமூகத் தேவைப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஜூலை 5 ஆம் திதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் (SLMC) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நூற்றாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து உத்தியோகபூர்வ நினைவு முத்திரையொன்றும் இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
இது மக்களுக்கும், மருத்துவ தொழிலுக்கும் அதேபோல் நமது நாட்டுக்கும் 100 வருட சேவை நிறைவை கொண்டாடும் சந்தர்ப்பம் மட்டுமல்ல. மருத்துவவியலில், நாம் உயிர்களுடன் பணியாற்றுவதால் இந்த பொறுப்பு மிகவும் தீர்க்கமானதாகும். கடுமையான சவால்கள் மத்தியிலும் கோவிட் பெருந்தொற்றின் போது மருத்துவ சேவை வெளிப்படுத்திய அர்ப்பணிப்பானது, இலங்கை சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த காரணமாக அமைந்தது.
நமது மருத்துவ கல்வியின் மூலம் மேலும் மனிதாபிமான, உணர்வுபூர்வுமிக்க, நெறிமுறை சார்ந்த முழுமையான மருத்துவர்களை உருவாக்குவது எவ்வாறு என்பதைப் பற்றிக் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் உங்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அத்தோடு,
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை அடைந்ததற்காக இலங்கை மருத்துவ சபைக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று போல் எதிர்காலத்திலும் உங்களுடன் இருப்பதில் அரசாங்கம் பெருமை அடைகிறது, எனத் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளின்த ஜயதிஸ்ஸ அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்,
அதன்போது,
நமது சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கி பயணிக்கின்ற காலத்திலேயே இருக்கின்றோம். பழைய உறுதிப்பாடுகளே புதிய சிக்கலான விஷயங்களுக்கு வழிசமைக்கின்றன. நாம் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையே மருத்துவ சேவை வழங்குதலை நோக்கி பயணிக்கும் போது, ஒழுங்குபடுத்தலும் அதனுடன் முன்னேற வேண்டும். இலங்கை மருத்துவ சபை இந்த அழுத்தங்களை தாங்கி நிற்கவில்லை, உண்மையில் நாம் அதன் மத்தியிலேயே இருக்கின்றோம்.
மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்ல, இலங்கையில் சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்கு நிலையை வடிவமைப்பதிலும் சுகாதார அமைச்சு இலங்கை மருத்துவ சபையை முக்கிய பங்காளியாக கருதுகின்றது. பல வருடங்களாக, உரிமம் வழங்குதல், கல்வி தரநிலைகள், தொழில்முறை மேம்பாட்டு பராமரித்தல், நெறிமுறை மேற்பார்வை மற்றும் சுகாதார பணியாளர் திட்டமிடுதல் போன்ற விடயங்களில் நாம் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். இவை சிறிய பணிகள் அல்ல – நமது குடிமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை இந்த விடயங்களே தீர்மானிக்கின்றன.
இக்கூட்டத்தில் தூதுவர்கள், சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago