Janu / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (26) அன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்கள மொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்பையும் அவர் கோரியதையடுத்து குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்புக்களுடன் சீராக கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜயரத்தினம் சரவணன்

47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago