Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தைத் தொடர்ச்சியாக நிலைகுலையச் செய்தமை, மோசடியான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட இன்னும் பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு, அரசாங்க தரப்பு எம்.பிக்கள், பலர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
தன்னிடம் சமர்ப்பிக்கப்படாத நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பை நடத்தி, மக்களின் இறைமையை குறைத்து மதிப்பிட்டமை, கணக்கெடுக்காமல் உறுப்பினர்களின் வாக்குகளின் எண்ணிக்கையை அறிவித்தமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு, கலந்துரையாடப்பட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஜனநாயகத்துக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இவ்வாறான நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதன் முதலாவது செயற்பாடாக, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஆராயப்படுகின்றது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரேரணை, இன்று (19) கையளிக்கப்படக்கூடுமென, அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
55 minute ago