2025 மே 21, புதன்கிழமை

சம்பள உயர்வை கட்டாயமாக்கச் சட்டம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார்துறை ஊழியர்களுக்கு, சம்பள உயர்வைக்  கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்கான சட்டமூலம்,  ஏற்கெனவே வரையப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தனியார்துறை ஊழியருக்கான சம்பளத்தை 2,500 ரூபாயினால் உயர்த்துமாறு அரசாங்கம் கேட்டதற்கு, 50 நிறுவனங்கள் மட்டும் இணங்கின.
இதனுள் சில அரை- அரசாங்க நிறுவனங்களும், தொழிற்சாலைகளையுடைய மிகச் சொற்பமான நிறுவனங்களும் அடங்குகின்றன.
தனியார்துறை ஊழியருக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 10,000 ரூபாயாக்கும் சட்டம், விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .