2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

செம்மணியில் மேலும்3 எலும்புக்கூடுகள் அடையாளம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதிதாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் புதிதாக 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 3 எலும்புக்கூட்டுத்  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 8 எலும்புக்கூடுகள் நேற்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

 கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்  பணிகளின் போது, மொத்தமாக 169 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 158 எலும்புக்கூட்டுத்  தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .