Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 20 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்ட சஹ்ரானுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மாத்தளை, மஹாவெல காவல் பிரிவின் கெட்டவல, ஹத்தமுங்கல பகுதியில் அமைந்துள்ள 21 ஏக்கர் நிலம் காட்டு யானைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது தெரியவந்தது.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சருமான கமகெதர திசாநாயக்க தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி விவகாரம் அம்பலமானது.
இந்தக் குழுக் கூட்டம் மாத்தளை மாகாண செயலகக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இது தொடர்பாகப் பேசிய மாத்தளை மாகாண செயலாளர் பி.பி. சேனாதிர, மாத்தளை நகரத்திற்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகள் இந்த நிலத்தை தங்கள் வாழ்விடமாக மாற்றுவதாகக் கூறினார்.
தற்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் சஹ்ரானுக்குச் சொந்தமான இந்த நிலத்தின் எல்லைகளை வரையறுக்க ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்ள நில அளவைத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்று மாகாண செயலாளர் குழுவிடம் தெரிவித்தார்.
இந்த நிலம் குறித்து மகாவெல காவல்துறையின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பி.பி. சிறிவர்தனவிடம் கேட்டபோது, ஈஸ்டர் தாக்குதல்களின் போது இந்த நிலம் இராணுவ பயிற்சி மையமாக பயன்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய திட்டமிடுவதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் இந்த நிலத்தைப் பயன்படுத்த குழு முடிவு செய்தது.
19 minute ago
31 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
45 minute ago