Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிப்பெண்களாக குவைட் நாட்டுக்கு சென்று, அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான பெண்களில் 60 பேர் இன்று (22) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
சம்பளம் மற்றும் உணவு வழங்கப்படாமை, காலை முதல் இரவு வரை பணிபுரிதல், தாக்குதலுக்கு உள்ளாதல் மற்றும் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும் உள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பிலிருந்த 15 பேரும் நாடு திரும்பியவர்களில் உள்ளனர்.
இதேவேளை, மேலும் 173 பேர் குவைட் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago