2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறிய புத்தர் சிலை; பொலிஸ் விளக்கம்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரொன்றின்  முன்பக்க கண்ணாடிக்கு அருகில், காருக்குள் வைக்கப்பட்டிருந்த சிறிய புத்தர் சிலையை அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியாக செய்தி பொய்யானதென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் சமூக  வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் காரொன்றின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய புத்தர் சிலையை அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கூறியதாக தெரிவித்து காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ் தலைமையக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த வாகனத்தின் முன்புற பிரதான கண்ணடியை மறைக்கும் வகையில் மேலிருந்து கீழ் வரை பொறுத்தப்பட்டிருந்த  மலர் மாலையை அகற்றுமாறே குறித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி அறிவுறுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய நபரிடம் மாத்திரமின்றி மேலும் நான்கு நபர்களிடம் இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக, குறித்த பொலிஸ் அதிகாரி புத்தர் சிலையை அகற்றுமாறு கூறவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X