2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுவர்களை சிறந்த பிரஜைகளாக்க வேண்டும்

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 சிறுவர்களை, சரியான முறையில் வழிநடத்தி, சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்த மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்  முஸம்மில், உலகில் விலை மதிக்க முடியாத சொத்தே சிறுவர்கள் எனவும் தெரிவித்தார்.   

 

சிறுவர் தினத்தை முன்னிட்டு மேல் மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு  அண்மையில்  , கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேல் மாகாண தலைமைச் செயலாளர் பிரதீப் யசரத்ன, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர்  எசல வீரகோன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்  முஸம்மில்: “ குழந்தைகள் தான் மதிப்புமிக்க சொத்து, அவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி, அவர்கள் வளர தேவையான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.”

அதேவேளை,  சிறுவர்களை ஊக்குவிக்கப் பல்வேறு துறைகளில், பல்வேறு அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் சேவைகளையும் இதன்போது ஆளுநர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X