2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிறைக்காவலர் உள்ளிட்ட நால்வர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை காவலர்  மற்றும் இலங்கை விமானப் படையின் சிவில் அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டவர்களின் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெயாங்கொடை, பெம்முல்லை, கொரொஸ்ஸ மற்றும் உடுகம்பொல ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை காவலர் உடுகம்பொல பகுதியை சேர்தவர் என்றும் ஏனையவர்கள் வெயாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .