2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்

Editorial   / 2020 ஜூலை 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழு உறுப்பினர்களால் சிறைச்சாலை ஆணையாளர்கள் மூவருக்கு  கடந்த வாரம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, சிறைச்சாலை கட்டுபாட்டு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் ஆணையாளர் துஷித உடுவர, புலனாய்வு பிரிவின் உதவி ஆணையாளர் பிரசாத் பிரேமதிலக ஆகியோரின் பாதுகாப்பே அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .