Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுவதையிட்டு, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வரட்சி கூடுதலாக காணப்படுவதாகவும், குறித்த மாவட்டங்களில் 2,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ,தெரணியகல, புளத்கோபிட்டிய மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,519 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் தங்கொட்டுவ, ஆராச்சிகட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 239 குடும்பங்களைச் சேர்ந்த, 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான குடிநீரை, பவுசர்கள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
9 hours ago