Editorial / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசை ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சீன மொழியிலான அறிவிப்பு பலகையை, ரயில்வே திணைக்களம் அகற்றியுள்ளது.
எதிர்காலத்தில், எந்தவொரு ரயில்வே நிலையத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் அனுமதி வேண்டும் என்று, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பாக, அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கல்கிசை ரயில் நிலையத்தில், சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகை, கடந்த 2015ஆம் ஆண்டு, பொதுமுகாமையாளரின் ஒப்புதலின் அடிப்படையில் வைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, கல்கிசைக்கு வரும் சீன சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாத்திரமே இந்தப் பலகை வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இப்பகுதியிலுள்ள ஹோட்டலொன்று, ரயில்வே நிலையத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது என்றும் தெரியந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026