2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சீனாவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் நிக்கெய் ஏசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளுமாறும் சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வேறு நடைமுறையை பின்பற்றுவதனால், ஏனைய தரப்பினரும் இணங்கும் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X