2025 ஜூலை 16, புதன்கிழமை

சீரற்ற காலநிலையால் 5 இலட்சம் பேர் பாதிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் வறட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ் தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக, மூன்று இலட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களும். சீரற்ற காலநிலை காரணமாக, இரண்டாயிரத்து 45 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X