Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த, ரஸீன் ரஸ்மின்
தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தின் 12 பிரதேச செயலகங்களில் வசிக்கும் 2,233 குடும்பங்களைச் சேர்ந்த 7,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, குறித்தப் பிரிவின் கீழ் வசிக்கும், 946 குடும்பங்களைச் சேர்ந்த 2,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், வென்னப்புவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வசிக்கும், 368 குடும்பங்களைச் சேர்ந்த 1,313 பேரும், நாத்தன்டியா பிரதேச செயலகப் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 856 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், முந்தல், மஹவெவ, கருவலகஸ்வெவ. தங்கொட்டுவ, மஹகும்புக்கடவல, ஆனமடுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களும், சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 50 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைப்பதற்காக, வனாத்தவில்லு, வென்னப்புவ, நாத்தன்டிய ஆகிய பிரதேச செயலகங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் இதுவரை, 58 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago