2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுரேன் ராகவன் - புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன், லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களை கடந்த 20 ஆம் திகதி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின்  கல்வி ,சுகாதாரம் ,விவசாயம் ,இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டது. 

மேலும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பில் இதன்போது விளக்கமளித்த ஆளுநர், இந்த கூட்டுறவு வங்கியின் ஊடாக வடமாகாண மக்களின் அபிவிருத்திக்கு எவ்வாறு புலம்பெயர் மக்கள் உதவ முடியும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X