2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சுற்றுலா வீதிகளை புனரமைக்க பிரதமர் அறிவுறுத்தல்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா வலயத்துக்கு பிரவேசிக்கும் சகல வீதிகளையும் புனரமைப்பு செய்யுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் சற்றுலா நடவடிக்கைகள் உள்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டவர்களும் இலங்கையில் சுற்றுலா செய்வதற்கு பாதுகாப்பான நாடாக கருதும் பின்னணியில், பிரதான வருமானம் பெறும் துறையாக சுற்றலாத்துறையை மாற்றுவது அவசியம் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களை திறந்ததன் பின்னர், ​வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிப்பதற்கான முன்னாயத்தமாக வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து, பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .