J.A. George / 2021 ஜூன் 04 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட 6 அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்தொழில்நுட்ப சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு சைபர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தாக இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த இணையத்தளங்களின் தகவல்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago