2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஜனாதிபதி, பிரதமர் , அமைச்சரவைக்கு நோட்டீஸ்

Editorial   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை அக்டோபர் 17 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் , புதன்கிழமை (27) உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்களை பரிசீலித்தது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு எந்த நோட்டீஸும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்தக்கு கொண்டுவந்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிஷ்க விதாரண, வழக்கை பரிசீலிப்பதற்கான விரைவான திகதியைக் கோரினார்.

அதன்படி, பிரதிவாதிகளுக்கு மேலும் நோட்டீஸ் அனுப்ப மனுதாரரின் வழக்கறிஞர்களுக்கு அமர்வு அறிவுறுத்தியது.

மனுவை ஒக்டோபர் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு நீதியர​சர்கள் அமர்வு உத்தரவிட்டது.

இந்த மனுவில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை உட்பட 31 நபர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .