2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 04 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இலங்கையின் அடுத்த அணுகுமுறை விரைவில் தொடங்கப்படும் என 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான தரப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யத் தவறினால், மூலோபாய குறைபாடுகள் உள்ள நாடாக இலங்கை பட்டியலிடப்படும் அபாயம் உள்ளதாகவும், அது நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .