2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள துமிந்த எம்.பி

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற, ஊழல், மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, இன்று முன்னிலையாகவுள்ளார்.

இன்ற காலை 11 மணியளவில் , இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு,  அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த திசாநாயக்க விவசாயத்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, ராஜகிரியவில் உள்ள தனியார் கட்டடமொன்றை விவசாய அமைச்சாக நடத்திச் சென்றமைத் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய, முன்னெடுத்துச் செல்லப்படும் விசாரணைகளுக்கு, துமிந்த எம்.பியிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .