2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கு பேராயர் பாராட்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை  நேற்று (29) இரவு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்ததுடன், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ளார்.

இதன்போது, பேராயரின் விஜயம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகுமென, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுமூக கலந்துரையாடலைத் தொடர்ந்து அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில், நினைவுப் பரிசில்களும் பரிமாறப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .