2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்தானந்த

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் தலைமைத்துவத்துடனான அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர், சிவில் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் , பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரால் பெயர் குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியிலிருந்து ஒருவர் ஆகியோர் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .