2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’ஜில்’ஐ அடையாளம் காட்டினால் ரூ.25 இலட்சம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடியுள்ளதாகவும் துல்லியமான தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபாயை வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள 'ஜில்' எனப்படும் பொன்னம்பெரும ஆராச்சிகே டொன் தனுஷ் புத்திக (வயது 30) என்பவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

முல்லேரியா தெல்கஹவத்த பிரதேசத்தில் பொலிஸ் சீருடை அணிந்திருந்த இனந்தெரியாத நபரால் நேற்று (26) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பாதாள உலகக்குழுவின் தலைவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .