2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஜூனில் எம்.பி ஆகிறார் ரணில்

R.Maheshwary   / 2021 மே 20 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(19) கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்த நிலையில், குறித்த ஒரு ஆசனத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுபறி நிலை ஒன்று காணப்பட்ட நிலையிலே​யே, ரணில் விக்கிரமசிங்க இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .