2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் பேரணி

Kamal   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி 200 க்கும் மேற்பட்ட பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.

குறித்த பேரணி கொழும்பு அத்துருகிரிய நகரில் இன்று பி.ப 3.00 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளது. பேரணியின் நிறைவில் ​ ஞானசார தேரருக்கு ஆசி வேண்டி விசேட பூஜை ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த பூ​ஜை மாலை 6.00 மணிக்கு பேராசிரியர் ​ஹிந்துருகரே தம்மரத்தன தேரர் தலைமையில் நடைபெறவுள்ளதாக பொதுபல சேனா ​அமைப்பின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .