Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி- டுப்ளி புல்லர்ஸ் சந்தியில் நேற்று அதிகாலை (24) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி மீது மோதிய டிபென்டர் வாகனம் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனும் கொழுப்பு மாநகர சபை உறுப்பினர் துமிந்த சுதம்மிக ஆட்டிகல ஆகியோர் விபத்துக்குள்ளான டிபென்டரில் பயணித்துள்ளனர்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய டிபென்டர் வாகன சாரதியும் இதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த டிபென்டர் வாகனத்துடன் பயணித்த மற்றுமொரு சொகுசு வண்டியில் பயணித்த மேலும் 4 சந்தேகநபர்களும் குற்றங்களையும் சாட்சிகளையும் மறைத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23- 28 வயதுக்கு இடைப்பட்டவர்களென்றும் இவர்கள் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago