George / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நேற்று (05) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய தந்தை, 28 வயது தாய் மற்றும் 4 வயது மகன் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்தில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ரவைகள் என்பன காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025