2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தொழிற்சாலையில் தீ

Gavitha   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை, வகவத்த பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தத் தீ விபத்தின் போது, குறித்த இடத்தில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் நால்வர் அங்கிருந்து வெளியேறிய போதும், அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் சேதவிவரங்கள் தெரியவரவில்லை. எனினும், பாரிய சொத்துச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஹொரணை நகரசபை, கொழும்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X