Freelancer / 2026 பெப்ரவரி 24 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவரது புதிய வரி அறிவிப்புகள் டொலரின் மதிப்பை வீழ்ச்சியடைய செய்துள்ளன.
டொலர் மீதான நம்பிக்கை குறைந்துள்ள சூழலில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த மூன்று வார காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச விலையாகும்.
இந்த நிலையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை 4 இலட்சத்தை எட்டியுள்ளது.
மேலும் 22 கரட் தங்கத்தின் விலை 370,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. R
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago