Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 17 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களைக் கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜையொருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என, சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர், சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை 1 மணியளவில் வந்தடைந்த விமானத்தில் வந்திருந்தனர் என்றும் அவர்களிடமிருந்து, 7 கிலோ 20 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் கூறினார்.
மேலும் அவை, 43 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபரை, சுங்க பிரிவினரிடம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
52 minute ago