2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

தெதுரு ஓயாவின் 06 வான் கதவுகள் திறப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 23 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலா ஓயா, தெதுரு ஓயா மற்றும் மீ ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா, ராஜாங்கனை, இங்கினிமிட்டிய, தப்போவ மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (23 ) அன்று காலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

2 வான் கதவுகள் தலா 06 அடி வீதமும், 04 வான் கதவுகள் தலா 04 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் தலா 2 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வான்கதவுகளிலிருந்து வினாடிக்கு 2,244 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன. அந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 590 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையில், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன.

அந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் 
மீ ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது. தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன.

அந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 1,760 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X