2026 மே 06, புதன்கிழமை

‘தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம்’

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள், நாளை தொடக்கம் (19) தமது பணியிடங்களுக்கு செல்ல தனியார் வாகனங்களைப் பயன்படுத்தாமல், தொழில் நிறுவனங்களால் வழங்கப்படும் போக்குவரத்து சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு, கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிர​தான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க ​தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதால், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நளையிலிருந்து தனியார் வாகனங்களில் கடமைக்கு வரும் அனைவருக்கும் நிறுவனங்களால் போக்குவரத்து சேவையை வழங்குமாறு, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .