2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘தன்னை நினைவுப்படுத்தாமல் ஜனாதிபதியால் எதுவும் செய்ய முடியாது’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தன்னை நினைவுப்படுத்தியதாகவும், தன்னை நினைவுப்படுத்தாமல் ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தான் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகியிருந்தால் 12 பில்லியன் ரூபாய் செலவில் எனது மாவட்டத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்யமாட்டேன் என்று இன்று நாடாளுமன்றத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தால் எதையெல்லாம் செய்திருக்க மாட்டேன் எனத் தெரிவித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தான் ஜனாதிபதியாகியிருந்தால் கருப்புக் கண்ணாடியுடன் மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்குச் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்க மாட்டேன் என்றும், 2 வாரங்களுக்கு ஒரு தடவை வௌநாடுகளுக்கோ சென்றிருக்கமாட்டேன் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X