2025 ஜூன் 18, புதன்கிழமை

‘தமிழின துரோகிகளே விமலுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள்’

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் இதுவரையில் தான் செய்த சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்கவே நுவரெலியா மாவட்ட மக்கள் தனக்கு அதிகாரத்தை வழங்க வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் மலையகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல, கொழும்பு மாவட்ட தமிழ் மக்களுக்கும் முக்கியமான தேர்தல். இந்நிலையில் கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்கக் கூடாதெனவும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் கூறும் தமிழர்கள், தமிழர்களின் துரோகிகள் எனவும் தெரிவித்தார்.

அப்பா கனவு கண்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் மலையகம் தொடர்பில் கனவு கண்டவர்கள் நாங்கள். நாம் கண்ட கனவே இன்று நனவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நல்ல தலைவர். அவருக்கு எதுவும் நடக்கக் கூடாது. எனது சொத்தை இழந்தே அரசியலுக்கு வந்திருக்கிறேன். பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவது அல்லது தோல்வியடைவது என்பது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநித்துவம் அதிகரிக்க வேண்டும். இ.தொ.காவின் வேட்பாளர்கள்கூட வெற்றிபெற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் நான் தோல்வியடைய வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

நான் அமைச்சராக பதவிவகித்தக் காலத்தில் எனது உறவினர்கள் எவருக்கும் எனது அமைச்சில் தொழில் வழங்கவில்லை. எனது மகனுக்கான பெற்றோர் கூட்டங்களில்கூட நான் இதுவரையில் கலந்துகொண்டதில்லை.

மலையகத்தில் நான் இதுவரையில் செய்த சேவையை தொடரவே அதிகாரத்தைக் கேட்கிறேன்.” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .